நிலவின் கவிதை
ஒளிர்ந்தது..
குளிர் நிறைத்து
இருளாய் விரிந்தது..
மின்னி மின்னி
மறைந்தது..
விண்மீன்கள்
துளிர்த்தது..
கடல் நடுவே
அலைகளைப் போல
அர்த்தம் இழந்தது…
கண்கள்,கடல்..
உடல்,உப்பு..
எங்கே காற்று?
எங்கே மண்?
வலசைப் பறவைகளின்
வழியில்
சுடர்ந்தது நிலா..