இரகசியம் பேசு…

March 17, 2009

நீ  பேசவே..
பூ
நிலவு
இரவு
தென்றல்
குழந்தை பருவம்
காயம்
கண்ணீர்
தேவதைகள்
காதல்
கடல்
அலை
மழை
வானம்
ஓவியம்
எழுதி தீராத கவிதைகள்
தினமும்
கேட்கும் பாடல்
ரசித்து படித்த
புத்தகம்
………
பிரபஞ்ச ரகசியம்
புரியாமலே விரிகிறது
செங்குருதி
நிணம்
செங்காற்றென
அடங்கிகிடந்த உயிர்ப்பூ..


உன்னை என்னால் காதலிக்க முடியாது…

March 2, 2009
Mad about U
Mad about U

இனி  கவிதைகளில்
நீ தேவதையாகவும்
எனக்கு
சிறகு முளைப்பதாகவும்
எழுதிவிட முடியாது…

காதலை பேச சொல்லி
காற்றை
நிறுத்த முடியாது..

இரவுக் குருவிகளின்
சத்தத்தையெல்லாம்
சங்கீதமென
சொல்ல முடியாது…

ஒருத்தரும்
எதிர்ப்படாத சாலைகளில்
உன்னை நினைத்து
புன்னகைக்க முடியாது…

சவரம் செய்ய
பற்பசையை
முகத்தில்
தடவிக் கொள்ள முடியாது..

சொல்லிவிடுகிறேன்
இனிமேல்
என்னால் பைத்தியமாக
இருக்க முடியாது…

நீ
வேண்டுமானால்
என்னை காதலித்து கொள்,

உன்னை
என்னால் காதலிக்க முடியாது…

காதலுக்கு
இரண்டு இதயங்கள் தேவை..
உனதும்,எனதுமாய்
இரண்டுமே
இன்று உன்னிடம்…

எனவே என்னால்
உன்னை காதலிக்க முடியாது..