March 2, 2009

- Mad about U
இனி கவிதைகளில்
நீ தேவதையாகவும்
எனக்கு
சிறகு முளைப்பதாகவும்
எழுதிவிட முடியாது…
காதலை பேச சொல்லி
காற்றை
நிறுத்த முடியாது..
இரவுக் குருவிகளின்
சத்தத்தையெல்லாம்
சங்கீதமென
சொல்ல முடியாது…
ஒருத்தரும்
எதிர்ப்படாத சாலைகளில்
உன்னை நினைத்து
புன்னகைக்க முடியாது…
சவரம் செய்ய
பற்பசையை
முகத்தில்
தடவிக் கொள்ள முடியாது..
சொல்லிவிடுகிறேன்
இனிமேல்
என்னால் பைத்தியமாக
இருக்க முடியாது…
நீ
வேண்டுமானால்
என்னை காதலித்து கொள்,
உன்னை
என்னால் காதலிக்க முடியாது…
காதலுக்கு
இரண்டு இதயங்கள் தேவை..
உனதும்,எனதுமாய்
இரண்டுமே
இன்று உன்னிடம்…
எனவே என்னால்
உன்னை காதலிக்க முடியாது..
1 Comment |
கவிதை, காதல், பொது, வாழ்க்கை | Tagged: காதல் |
Permalink
Posted by கண்ணன் பெருமாள்