விடுபட்ட கவிதைகள்!!!

February 24, 2009

Love Never Ends
Love Never Ends

நீ
தொட்டுவிட்டால்,
உன்
அனிச்ச விரல்
பட்டுவிட்டால்,
பாவம் விலகுமடி,
ஜென்ம
சாபம் தீருமடி!

கட்டியணைத்துவிடு
என்
காயம் ஆற்றிவிடு!

கனவே
கண் வந்துவிடு,
என்
கண்ணீர் கொஞ்சம்
ருசித்துவிடு!

இதயம் திறந்துவிடு,
என்
இளமை கொன்றுவிடு!

கவிதை பாடிவிடு,
என்
காதல் ஏற்றுவிடு!

தோள் சேர்ந்துவிடு
என்
துயரம் தாங்கிவிடு!

இதழ் சேர்த்துவிடு
என்
இனிமை உறிஞ்சுவிடு!

கண் பார்த்துவிடு
என்
காதல்ஜோதி ஏற்றிவிடு!

நிலவே
கொஞ்சம் இறங்கிவிடு,
இந்த சூரியனை
மடியில் சுமந்துவிடு!