
அவள்
அருகிலில்லாத இரவுகள்
எப்படி உறங்குவாய்?
மின்சாரம் தடைப்பட்ட
இரவுகளும் அதுபோலவே;
உடைந்து வரும் வார்த்தைகளில்
மத்திய மாநில சர்க்கார்கள்
நொறுங்கிபோயிருக்கும்;
புரண்டு படுத்தாலும்,
முகம் புதைத்தாலும்,
போர்வை உதறினாலும்
வருவதில்லை நேற்று வந்த தூக்கம்!
தியானத்திற்கு எழுத்து கூட்டாத நீ
கண்ணை மூடி உறக்கத்தை
உச்சரிக்க வேண்டிவரும்,
அவள் அருகிலில்லாத இரவுகளில்,
மின்சாரம் தடைப்பட்ட இரவுகளில்!
மகாநதிகளும்,காற்றும்,கடலும்
என் கருவறைகள்,
இனிவரும் நூற்றாண்டுகளில்
குளோனிங் குழந்தைகள்
கருவறை தொடாமல் கால் பதிக்கலாம்;
மின்சாரம் இல்லாமல்?
காதலின் சாட்சியாக
இருந்த குழந்தைகள்,
விஞ்ஞானத்தின் நீட்சியாகும்போது,
அவள் அருகிலில்லாத இரவுகள்?
மின்சாரம் தடைப்பட்ட இரவுகள்!
Posted by கண்ணன் பெருமாள்
Posted by iamlaksh1 
Posted by கண்ணன் பெருமாள் 





