சாபங்களையே சந்தித்தவன்
வரந்தர வந்தவளையே
வரமாக கேட்டு விட்டான்,
இறகுகள் வேண்டாமென
சிறகுகளையே கேட்டு விட்டான்,
கவிதைகள் வேண்டாமென
கலைமகளையே கேட்டுவிட்டான்,
மேகங்கள் வேண்டாமென
வானத்தையே கேட்டுவிட்டான்
விளக்குகள் வேண்டாமென
விண்மீன்கள் கேட்டுவிட்டான்,
நான் வேண்டாமென
வரம் வாங்க வந்தவனிடம்
நீ என்ன கேட்க போகிறாய்?