தொடுவானம் தொடாத விரல்

ஜூலை 12, 2008

இதற்குப் பெயரும் காதல்தானா?

கோப்பு வகை: அன்பு, காதல் — kannan824u @ 5:32 பிற்பகல்
Tags: ,

யுகயுகமாய் காதலித்தும்
என்ன பிரயோஜனம்?
என்றுமே
என் அனுமானங்களை
கடந்து விடுகிறது
உன் அன்பு மட்டும்!

உன்னால் மட்டுமே முடிகிறது
ஒன்றிரண்டு வார்த்தைகளில்
உயிரை உறிஞ்சும்படியான
காதலை சொல்ல!

பேனாவை தொடாமல்
நாள் முழுவதும்
கைகட்டியபடியே இருந்தேன்,
உன் அளவில்லாத அன்பால்
அடக்கமில்லாதவனாகிவிட மனமில்லாமல்!

உன் அன்பை
பற்றிக் கேட்டேன்
நீ
ஆகாயத்தை கை காட்டினாய்,
இதற்குப் பெயரும் காதல்தானா?

ஜூலை 5, 2008

காதல் சொல்லும் கவிதைகள்-3!!!

கோப்பு வகை: அன்பு, காதல் — kannan824u @ 4:46 பிற்பகல்
Tags: ,

உன்னால்
என்னை நம்ப முடியவில்லை,
பிறகு
என்னால் என்னை எப்படி நம்புவது?

தொலைபேசியில் கண்டபடி
எண்களை அழுத்திவிட்டு
எப்பொழுதும் அப்பாவிடமே
பேசிக்கொண்டிருக்கும்
குழந்தையைப் போல ஆகிவிட்டேன்;

உன்னைத் தெரிந்தவர்களிடம்
கண்டபடி பேசிவிட்டு,
தெரியாதவர்களிடம் பேசிய
வெட்கமும்,
உன்னிடம் பேசமுடியாத
துக்கமுமாக,
நாளெல்லாம்
வெறுமையில் கரைகிறது!

உன் வெட்கம்
என் பேனாவிற்கும் பிடித்துவிட்டது,
தலை குனிந்த பிறகும்
வார்த்தை மட்டும் வரவேயில்லை!

உன்னை பிடித்திருப்பதால்தான்
நீ தூக்கியெறியும்போதெல்லாம்
பூமாராங் மாதிரி
திரும்பி உன்னிடமே வருகிறேன்!

தூரமாக எறிந்துவிடாதே,
திரும்பி வருவதற்குள்
நீ எங்காவது போய்விடப் போகிறாய்!

ஜூன் 26, 2008

அவள் அருகிலில்லாத இரவுகள்!!!

அவள்
அருகிலில்லாத இரவுகள்
எப்படி உறங்குவாய்?

மின்சாரம் தடைப்பட்ட
இரவுகளும்  அதுபோலவே;

உடைந்து வரும் வார்த்தைகளில்
மத்திய மாநில சர்க்கார்கள்
நொறுங்கிபோயிருக்கும்;

புரண்டு படுத்தாலும்,
முகம் புதைத்தாலும்,
போர்வை உதறினாலும்
வருவதில்லை நேற்று வந்த தூக்கம்!

தியானத்திற்கு  எழுத்து கூட்டாத நீ
கண்ணை மூடி உறக்கத்தை
உச்சரிக்க வேண்டிவரும்,
அவள் அருகிலில்லாத இரவுகளில்,
மின்சாரம் தடைப்பட்ட இரவுகளில்!

மகாநதிகளும்,காற்றும்,கடலும்
என் கருவறைகள்,
இனிவரும் நூற்றாண்டுகளில்
குளோனிங் குழந்தைகள்
கருவறை தொடாமல் கால் பதிக்கலாம்;
மின்சாரம் இல்லாமல்?

காதலின் சாட்சியாக
இருந்த குழந்தைகள்,
விஞ்ஞானத்தின் நீட்சியாகும்போது,
அவள் அருகிலில்லாத இரவுகள்?
மின்சாரம் தடைப்பட்ட இரவுகள்!

ஜூன் 25, 2008

எனது மொழிபெயர்ப்புகள்

கோப்பு வகை: பகுக்கப்படாதது — iamlaksh1 @ 12:04 பிற்பகல்

ஜூன் 21, 2008

காதல் கிசுகிசு -நிலாக் கவிதைகள்-1

கோப்பு வகை: அன்பு, காதல், நிலா — kannan824u @ 12:26 நான்
Tags: ,

ஜூன் 18, 2008

கண்கள் உள்ளவரை…

கோப்பு வகை: காதல் — kannan824u @ 2:09 நான்
Tags:

ஜூன் 17, 2008

உளரலாய் ஒரு கவிதை!!!

கோப்பு வகை: மழழை — kannan824u @ 2:47 பிற்பகல்
Tags:

ஜூன் 15, 2008

மாறாத என் காதல் தேவதையே…

கோப்பு வகை: அன்பு, காதல் — kannan824u @ 5:45 பிற்பகல்
Tags: , ,

நீ
நிலவென்பதால்
என் காதலும்
இரவாகவே
இருந்து விடுகிறது!

நீ
கவிதையென்பதால்
என் காதலும்
தமிழோடு
தங்கி விடுகிறது!

நீ
அழகு என்பதால்
என் காதல்
கண்களாகவே
காலம் தள்ளுகிறது!

நீ
அடக்கம் என்பதால்
என் காதல்
ஒழுக்கமாக
ஒதுங்கி நிற்கிறது!

நீ
நதி என்பதால்
என் காதல்
கடலாக
காத்திருக்கிறது!

நீ
பூ என்பதால்
என் காதல்
வாசமாக
வீசுகின்றது!

கடைசியில்
நீ
என்பதால்தான்
என் காதல்
இப்படி வெட்கப்படுகிறது!

தீராத காதல்மழையின்
துவக்க வரிகளாக
இருகரைகளிலும்
கவிதை மேகங்கள்!

நீயா?நானா?
விழிக்கும்,
மனதிற்கும்
காதல் சமர்;

காதல் பெரும்புனலில்
கரைகள்
கரைவதற்குள்
மனதின் மதகுகளை
திறந்திடு சகியே!

நாகரிகம் கருதி
நானும்;
நாணம் கருதி
நீயும்
பேசாமல் பேசுகிறோம்!

உன் வழியில்
நானும்;
என் வழியென
நீயும்
காத்திருந்தோம்;

நாம்
சந்திக்கவேயில்லை;
காதல்
நம்மை சந்தித்தது!

நான்
முத்தப்போருக்கு
அழைத்த போதெல்லாம்
நீ
முகம் திருப்பிக்கொண்டாய்;

அன்று புரியவில்லை
நீ
கன்னம்தான்
காட்டுகிறாயென்று!

ஜூன் 14, 2008

அமைதியாக ஒரு யாசகன்…

கோப்பு வகை: அன்னை, அன்பு, காதல் — kannan824u @ 3:02 பிற்பகல்
Tags: , , , ,

நான்
ஒரு யாசகன்,
அன்பை மட்டுமே
யாசகமாக
பெறுகிறேன்!

இது
என் குலத்தொழில்
இல்லை;
நான்
கர்ண பரம்பரை;

என் அன்னைதான்
இப்படி ஆக்கிவிட்டாள்;
அளவில்லாமல்
அன்பைக் கொடுத்தாள்!

அவளிடம்
கேட்காமல் கிடைத்தது,
இன்று
கேட்டும் கிடைக்கவில்லை.

யாசகனுக்கு
முகம் கிடையாது;
முகமூடிதான்
அவனுக்கும் அடையாளம்;

எனக்கு
இரண்டுமே கிடையாது;

அடையாளமோ,
அரிதாரமோ
அவசியமற்றது;

எவர் கனவுகளிலும்
நான்
வருவதில்லை;
எனக்கு
கனவுகள் உண்டு;
கவிதைகள் உண்டு!

என் தோள்களில்
சிறகுகள் முளைக்கும்
வேளையில்
தாங்க முடியாத வலி;

பல காயங்களுக்கு
நான்
மருந்தாகியிருக்கிறேன்;
என் வலிகளுக்கு
நான் மாத்திரை
கேட்பதில்லை!

எனக்காக,
எனக்கு
அழத்தெரியாது;
என்
பொம்மைகளுக்காக
அழுதிருக்கிறேன்.

முளைவிடும்
விதையைப்போல,
வார்த்தைகளுக்குள்
அழுந்திக்கிடக்கிறது
என் தவம்;

எனக்கும்
வானம்தான் கூரை;
நதிதான் தண்ணீர்
தருகிறது;

என் பச்சையங்கள்
பசியாற்றுகிறது;
பறவைகள் இசையும்;
காற்று
சுவாசமும் தருகிறது.

இந்த உலகம்
இரண்டாவது தாய்;
என்னை
பெரும் யாசகனாக்கியது.

என்னிடம்
புன்னகைப்பவர்களுக்கு
நான்
பூச்செண்டு கொடுப்பேன்;

யாசகனின்
பரிசு வாடிவிடும்;
உங்கள் புன்னகையோ
என்றுமே எனக்குள்
பூத்துக்கொண்டிருக்கும்.

யாசகம் கேட்பது
தவறுதான்;
அமைதியாக இருந்திருந்தால்
நீயே
புன்னகைத்திருக்க கூடும்…

ஜூன் 13, 2008

காதல் சொல்லும் கவிதைகள்-2!!!

கோப்பு வகை: அன்பு, காதல் — kannan824u @ 10:04 பிற்பகல்
Tags:

இந்த இரவையும்
உன் நினைவுகள்
விழுங்கி விட்டன,

புத்தகம் திறந்தபோது
என்னை வாசிக்கிறது
உனது கண்கள்,

வெளியில்
ஓடினேன்
வழியெங்கும்
உன்
கொலுசு மணிகள்,

கருவானம் காற்றில்
அசைகிறது
உன் கார் கூந்தலாய்;

சுவர்க்கோழியின்
சப்தங்கள்,
மௌனத்தின்
ஒலங்கலாய் உலுக்குகிறது ;

பெயர் தெரியாத
விண்மீன்கள்
உன்
பெயரைச் சொல்லி
கண்சிமிட்டுகின்றன;

நான்
என்ன செய்தேன்?

பேராசை,பெருங்கனவு
பெண்களுக்கு
மட்டும்தானா?

காதல் சதுரங்கத்திலும்
ராஜாக்கள்
ஒரு கட்டந்தான்
நகர முடியுமா?

அந்தப்புரத்தின்
அமைதி குழைக்க
காதல் போருக்கு
வேல்விழியோடு
காத்திருக்கிறாய்;

நீ
என்ன சந்திரகாந்தமா?
நெருங்கினால்
எரிக்கிறாய்
விலகினால்
உறையவைக்கிறாய்!

என்
மனதிற்கு கதவு
கிடையாது;

நீ
பூட்டு
கொடுத்தால்
நான் கதவுக்கு
எங்கு போவேன்?

பகைவனுக்கருள்வாய்
என்றான் பாரதி,
நீ
நேசிப்பவனையே
இவ்வளவு
இம்சைகள் செய்கிறாய்,
உனது
பகைவன் பாவம்!

அடுத்த பக்கம் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.